புளிய மரத்தில் மோதி அப்பளம் போல் நொறுங்கிய தனியார் கல்லூரி பேருந்து! மாணவர்களின் நிலை? - Seithipunal
Seithipunal


தர்மபுரி, ஊத்தங்கரை அருகே செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி பேருந்து பள்ளிப்பட்டி அருகே உள்ள சக்கர ஆலை வழியாக மாணவர்கள் ஏற்றுக்கொண்டு இன்று காலை சென்றது. 

அப்போது அம்மாபாளையம்-ஜாலிகாடு பிரிவு சாலை பேருந்து சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. 

இதில் பேருந்தில் முன்பக்கம் அமர்ந்து கொண்டிருந்த 8 மாணவர்கள் லேசான காயமடைந்தனர். இந்த பேருந்தை நடுவர் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர் ஓடி வந்தார். 

இவருக்கு கையில் லேசாக காயம் ஏற்பட்டது. இந்த குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதனை தொடர்ந்து போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். காலை நேரம் என்பதால் மாணவர்கள் குறைந்த அளவில் பேருந்தில் பயணம் செய்ததால் அனைவரும் பின்பக்கத்தில் அமர்ந்திருந்தனர். 

இதனால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

private college bus collides with tree


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->