பெய்ட்டி புயலுக்கு நேரம் குறித்த, வானிலை ஆய்வு மையம்! - Seithipunal
Seithipunal


வங்கக்கடலில் பெய்ட்டி என்ற புயல் உருவாகி உள்ளது. இந்த புயலால் சென்னை உட்பட வட தமிழக கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பெதாய் புயல் அடுத்த 6 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பெய்ட்டி புயல் நாளை பிற்பகலில் ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கும் என்றும் சென்னையை பொறுத்தவரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போது, பெய்ட்டி புயல் சென்னைக்கு தென் கிழக்கே 410 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. மணிக்கு 19 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Phethai Cyclone in Weather Research Center


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->