ஏட்டய்யா..! ஆ..! காட்டுங்க..! பரமக்குடி காவல் நிலையத்தில் நடக்கும் கூத்து..!! வைரல் வீடியோ...!!!
ஏட்டய்யா..! ஆ..! காட்டுங்க..! பரமக்குடி காவல் நிலையத்தில் நடக்கும் கூத்து..!! வைரல் வீடியோ...!!!
பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் பெண் காவலர் ஒருவர் ஏட்டுக்கு கேக் ஊட்டும் வீடியோ சமூக வலைதளங்களான வாட்ஸ்அப், பேஸ்புக்கில் தற்போது வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், பெண் காவலரும், ஆண் காவலரும் குதூகலித்துக் கொண்டிருப்பது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகர் காவல்நிலையம் என தகவல் கிடைத்துள்ளது. வீடியோவில் வரும் காவலர்கள் அந்த காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரியும் மாரியம்மாள், முத்துப்பாண்டி என்பதும் தெரியவந்துள்ளது.
பரமக்குடி காவல் நிலைய காவலர்கள், இதுபோன்ற சர்ச்சையில் சிக்குவது புதிதல்ல. ஏற்கனவே, கடந்த வாரம் பரமக்குடி எஸ்ஐ முனியசாமி, குறி சொல்லும் முதியவரை செருப்பால் அடித்து துவைத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது குறிப்பிடத்தக்கது.
English Summary
PARAMAKUDI POLICE STATION VIDEO