சாலையில் திடீர் பள்ளம்: திருச்சி - ஸ்ரீரங்கம் இடையே போக்குவரத்து பாதிப்பு! வாகன ஓட்டிகள் கடும் அவதி.! - Seithipunal
Seithipunal


திருச்சி, ஸ்ரீரங்கம் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. திருவானைக்காவில் இருந்து ஸ்ரீரங்கம் செல்லும் காந்தி சாலை ரயில்வே மேம்பாலத்திற்கு முன்பாக உள்ள சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. 

இதே பகுதியில் கடந்த 10 ஆம் தேதி பாதாள சாக்கடையில் ஓட்டை விழுந்து தற்காலிகமாக சரி செய்யப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அதே பகுதியில் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. 

இந்த பள்ளம் ஏற்படுவதற்கு, பாதாள சாக்கடையில் குழாய் வெடித்தது தான் காரணம் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்றுப்பாதையில் வாகனங்கள் இயக்கப்படுகிறது.

மேலும் பள்ளத்தை சரி செய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy Srirangam between road pothole


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->