அடுத்த மூன்று மணி நேரத்தில் வெளுக்க போகும் மழை.!
next three hours rain in tamilnadu
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 31-ந் தேதி வரை சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், அதிலும் 31-ந் தேதி தென்மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் ஏழு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெல்ல பத்திப்பால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த பாதிப்பிலிருந்து இன்னும் மீளாத நிலையில் தற்போது மழை பதிவாகியுள்ளது மக்களுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
next three hours rain in tamilnadu