அமலாக்கத்துறையை வைத்து எதிர்கட்சிகளை மிரட்டுகிறார் மோடி - கே.பாலகிருஷ்ணன் குற்றசாட்டு!!
Modi is threatening ED department balakrishnan
இந்தியாவில் மக்களவை தேர்தலுக்கான இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்து உள்ளது. மூன்றாம் கட்ட வாக்குபதிவுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகிறது. பிரதமர் மோடி சமீபத்தில் தமிழ்நாட்டில் பிரபலமான தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.
பேட்டியில் மோடி, ஊழல் வழக்கு உள்ளவர்கள் பாஜகவில் இணைந்திருந்தாலும் அவர்கள் மீதான அமலாக்கத்துறை வழக்குகள் ரத்து செய்யப்படவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியது பெரும் சர்சையானது. அதுகுறித்து, தமிழ்நாடு அரசியல் கட்சி தலைவர் பலரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.
அந்தவகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசிகையில், மிரட்டல் ராஜ்யத்தை மூடி மறைக்கவே பிரதமர் மோடி எதிர்க்கட்சிகள் மீது அபாண்டமான குற்றசாட்டுகளை கூறிவருகிறார்.அமலாக்கத்துறையை வைத்து எதிர்கட்சிகளை மிரட்டும் போக்கு அதிகரித்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார்.
English Summary
Modi is threatening ED department balakrishnan