விரைவில் 100 சதவீத பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் சிவசங்கர்.!
minister sivasangar press meet in thoothukudi
தமிழகத்தில் பெய்த கனமழையால் தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்ட நிலையில், போக்குவரத்து பணிமனைகளையும், நீரில் மூழ்கிய பேருந்துகளையும் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நேரில் பார்வையிட்டார்.
அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:- "நெல்லை மாவட்டத்தில் 95 சதவீத பேருந்து போக்குவரத்து இயக்கப்படுகிறது. தூத்துக்குடியில் 45 சதவீத பேருந்துகள் இயக்கப்படுகிறது.
மாவட்டம் முழுவதும் வெள்ளநீர் வடிந்ததும் விரைவில் 100 சதவீத பேருந்து போக்குவரத்து சேவை இயக்கப்படும். அதேபோல் தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் போக்குவரத்து சேவை முழுமையாக இயக்கப்படுகிறது என்றுத் தெரிவித்தார்.
English Summary
minister sivasangar press meet in thoothukudi