தங்க நகை பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து: தொழிலாளர்களின் கதி? - Seithipunal
Seithipunal


மதுரை, மதுகரை அருகே செயல்பட்டு வந்த தங்க நகை பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று மதியம் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

தொழிற்சாலையில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்த நிலையில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

மேலும் தொழிற்சாலையில் இருந்த 5க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் வெடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே இந்த தீ அருகில் இருந்த பிளாஸ்டிக் குடோனிற்கும் பரவி உள்ளது. 

இந்நிலையில் சிறிதளவு தீ விபத்து ஏற்பட்ட பொழுது தொழிற்சாலையில் இருந்த தொழிலாளர்கள் பத்திரமாக வெளியேறியதாகவும் இந்த தீ விபத்தினால் யாருக்கும் எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது. 

இருப்பினும் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தீ விபத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai gold jewelry box factory fire accident


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->