மின்சார ரயிலில் சிக்கி கல்லூரி பேராசிரியர் பலி.!!
College professor train accident death
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் சசிகலா என்பவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். சசிகலா இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதால் இவருடைய சகோதரர் சுப்புராஜன் சென்னை கிண்டியில் வசித்து வருகின்றார். இதனால் சசிகலா சகோதரை காண்பதற்காக சென்னை வந்துள்ளார்.
நேற்று திண்டுக்கல் செல்வதற்காக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து நேற்று சசிகலா கிண்டி ரயில்வே நிலையம் வந்துள்ளார். தற்போது சசிகலா தண்டவாரத்தை கடந்து செல்ல முயன்றபோது தாம்பரம் இருந்து சென்னை கடற்கரை நோக்கி வந்த மின்சார ரயில் அவர் மீது மோதியதில் தலையில் பலத்தகாயம் அடைந்து சசிகலா ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிர் இழந்துள்ளார். இது பற்றி மாம்பலம் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
English Summary
College professor train accident death