கேரள இளைஞர் காங்கிரசார் திடீர் போராட்டம்: போலீசார் அதிரடி நடவடிக்கை! நடந்தது என்ன?
Kerala youth congress protest
மேற்குவங்க மாநில ஆளுநர் சி.வி ஆனந்த போஸ் மீது ஆளுநர் அலுவலக பெண் ஊழியர் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சி.வி. ஆனந்த போஸ் கேரளா, கொச்சி அருகே உள்ள ஆளுவா வழியாக சென்றுள்ளார். அப்போது அவருக்கு எதிராக கேரளா இளைஞர் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் கருப்புக்கொடி காட்டி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்தனர்.
English Summary
Kerala youth congress protest