கோவையில் டியூக் புள்ளிங்கோ செய்த சம்பவம்.! வெளியான சிசிடிவி காட்சிகள்.! - Seithipunal
Seithipunal


கோவை அருகே பெட்ரோல் பங்கில், பெட்ரோல் நிரப்பி விட்டு பணம் கொடுக்காமல் தப்பித்து செல்லும் இரண்டு இளைஞர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் : கே என் ஜி புதூர் பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் நேற்று இரவு டியூக் இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் நிரப்புவதற்காக இரண்டு இளைஞர்கள் வந்துள்ளனர். 
200 ரூபாய்க்கு பெட்ரோல் போடுமாறு பெட்ரோல் பங்கு ஊழியரிடம் இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

பெட்ரோலுக்கான பணத்திற்காக ஒரு ஏடிஎம் கார்டை ஒன்றையும் பெட்ரோல் பங்க் ஊழியரிடம் அந்த இளைஞர்கள் கொடுத்துள்ளனர். ஆனால் அந்த வங்கி ஏடிஎம் கார்டில் போதிய பணம் இல்லை என்று பெட்ரோல் பங்க் ஊழியர் தெரிவித்துள்ளார்.

அதன்பிறகு பெட்ரோலுக்கான பணத்தை தருவதாக கூறிய இளைஞர்கள், பணம் எதுவும் தராமல் கண்ணிமைக்கும் நேரத்தில், அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். 

அந்த இளைஞர்களை துரத்திப் பிடிக்க முயன்ற பெட்ரோல் பங்க் ஊழியர், தடுப்பு சுவரில் மோதி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். 

இந்த சம்பவம் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியது. இந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு கே ஜி புதூர் காவல் நிலைய காவல் நிலையத்தில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் புகார் அளித்துள்ளார்.

புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் அந்த இளைஞர்கள் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KOVAI PETROL BUNK CCTV


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->