பள்ளி மாடியில் இருந்து குதித்த மாணவி: விசாரணையில் வெளியான பகீர் தகவல்! - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு மாணவி முதல் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கரூர், பசுபதிபாளையத்தை சேர்ந்தவர் தம்பிராஜ். இவர் கூலி தொழிலாளி. இவரது மகள் கார்த்திகா (வயது 17). இவர் பசுபதீஸ்வரா நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கணினி அறிவியல் பாடப் பிரிவில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். 

இவர் இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்குச் சென்று பிற்பகல் இடைவேளையில் மதிப்பெண் தாழ் வாங்கி செல்வதற்காக முதல் மாடியில் உள்ள ஆசிரியரை பார்க்கச் சென்றுள்ளார். 

அப்போது திடீரென மாணவி கார்த்திகா முதல் மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் உடனடியாக கார்த்திகாவை மீட்டு அவசர ஊர்தி மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

முதல் மாடியில் இருந்து குதித்த மாணவிக்கு கை, கால், இடுப்பு பகுதிகளில் எலும்பின் முறிவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், மாணவி கார்த்திகா அரையாண்டு தேர்வில் மதிப்பின் குறைவாக எடுத்ததால் சக மாணவிகள் கார்த்திகாவிடம் பழகாமல் இருந்துள்ளனர். 

இதனால் மனவேதனை அடைந்த கார்த்திகா தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karur student Suicide attempt police investigation


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->