வேலூரில்., சாலையை கடக்க முயன்ற மாணவி கார் மோதி பரிதாப பலி.! கொதிக்கும் மக்கள்.!! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டத்தில் உள்ள சத்துவாச்சாரியை அடுத்துள்ள நேரு நகரை சார்ந்தவர் ராஜா. இவர் தேநீர் கடையில் பணியாற்றி வருகிறார். இவரது மகளின் பெயர் தமிழ்செல்வி (14)., இவர் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9 ம் வகுப்பு பயின்று வருகிறார். 

தினமும் பள்ளிக்கும் வீட்டிற்கும் நடந்து செல்லும் தூரம் என்பதால் நடந்து சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார், அவ்வாறு நடந்து செல்லும் போது தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்று வருவது வழக்கம். 

அந்த வகையில்., நேற்று மாலை பள்ளி நிறைவு பெற்றதும் வழக்கம் போல சாலையை கடந்துள்ளார். அப்போது அந்த சாலையில் வந்த கார் ஒன்று தமிழ்செல்வியின் மீது பயங்கரமாக மோதியது. 

இதனால் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த சம்பவம் குறித்து அந்த பகுதி வாசிகள்., இந்த பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க கூறி பல முறை மனு அளித்து., கடந்த 3 வருடங்களுக்கு முன்னதாக பூமி பூஜையானது போடப்பட்டது., ஆனால் அதற்கு பின்னர் ஒரு பணிகளும் தற்போது வரை தொடங்கவில்லை. 

மேலும்., இந்த இடத்தில் பலர் சாலையை கடக்கும் போது பரிதாபமாக பலியாகியுள்ளனர்., இந்த பிரச்சனைக்கு சுரங்கப்பாதை அமைப்பதே தீர்வு என்று தெரிவித்தனர்.  
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in vellore a school student died in accident when crossing road


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->