#Breaking: பொள்ளாச்சி வழக்கு தொடர்பான விசாரணை சி.பி.ஐ வசம்.!! அடுத்தடுத்து வெளியாகப்போகும் பரபரப்பு தகவல்.!!
in pollachi sexual harassment issue is convert investigation CBCID to CBI
கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் பொள்ளாச்சியில் பணிக்கு மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் சுமார் 200 க்கும் மேற்பட்ட பெண்களை காதல் வலையில் விழ வைத்து., ஆபாச படமெடுத்து மிரட்டி நகை மற்றும் பணங்கள் பறித்தும்., பலாத்காரம் செய்ததும் தெரியவந்துள்ளது. இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக முதலில் சபரிராஜா., சதீஸ் மற்றும் வசந்தகுமார் என்பவர்களை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இவர்களில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு என்பவன் தலைமறைவாகவே., கைதானவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு., திருநாவுக்கரசை தேடி வந்தனர். கடந்த 5 ம் தேதியன்று திருநாவுக்கரசை அதிரடியாக கைது செய்த காவல் துறையினர்., திருநாவுக்கரசிடம் மேற்கொண்ட விசாரணையில் பல அதிர்ச்சி சம்பவங்கள் தொடர்ந்து வெளியானது. கல்லூரியில் பயிலும் காலத்தில் இருந்து தன்னுடன் பயிலும் சக மாணவிகளை மயக்கி பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில்., சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர் திருநாவுக்கரசின் பண்ணை இல்லம் மற்றும் அவனுடைய இல்லத்தில் அதிரடி சோதனை மற்றும் விசாரணையை நடத்தினர். அந்த விசாரணையில் திருநாவுக்கரசின் இல்லத்தில் இருந்த 10 அலைபேசிகள்., மெமரி கார்டுகள் மற்றும் பென் டிரைவுகள் கைப்பற்றப்பட்டது. இந்த விஷயம் தொடர்பான விசாரணையானது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையானது நடைபெற்று கொண்டு இருக்கும் வேளையில்., இந்த வழக்கு சி.பி.ஐ வசம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டு., அரசாணை வழங்குவதற்கு வழக்கு தொடுக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்குதொடர்பான விசாரணையானது இன்று நடைபெற்று வந்த நிலையில்., தமிழக அரசின் சார்பில் சி.பி.ஐ அதிகாரிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட கடிதம் பெறப்பட்டது என்றும்., இந்த வழக்கு தொடர்பான விசாரணையை விசாரிப்பது குறித்து உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது என்றும் பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
in pollachi sexual harassment issue is convert investigation CBCID to CBI