பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட 10 பெண்கள் தற்கொலை.! வெளியான பேரதிச்சி சம்பவம்.!!
in pollachi girl miss used case 10 girls attempt suicide
கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் பொள்ளாச்சியில் பணிக்கு மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் சுமார் 200 க்கும் மேற்பட்ட பெண்களை காதல் வலையில் விழ வைத்து., ஆபாச படமெடுத்து மிரட்டி நகை மற்றும் பணங்கள் பறித்தும்., பலாத்காரம் செய்ததும் தெரியவந்துள்ளது. இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக முதலில் சபரிராஜா., சதீஸ் மற்றும் வசந்தகுமார் என்பவர்களை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இவர்களில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு என்பவன் தலைமறைவாகவே., கைதானவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு., திருநாவுக்கரசை தேடி வந்தனர். கடந்த 5 ம் தேதியன்று திருநாவுக்கரசை அதிரடியாக கைது செய்த காவல் துறையினர்., திருநாவுக்கரசிடம் மேற்கொண்ட விசாரணையில் பல அதிர்ச்சி சம்பவங்கள் தொடர்ந்து வெளியானது. கல்லூரியில் பயிலும் காலத்தில் இருந்து தன்னுடன் பயிலும் சக மாணவிகளை மயக்கி பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இந்த விஷயம் தொடர்பான பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. மேலும்., அவர்களிடம் இருந்த காணொளி காட்சிகளில் மூன்று பதிவுகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும்., திருநாவுக்கரசு கல்லூரியில் பயிலும் காலத்தில் இருந்தே தன்னிடம் பயிலும் மாணவிகளை காதல் வலையில் விழ வைத்து ஆபாச படம் எடுத்ததும்., மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில்., இந்த வழக்கு தொடர்பான விசாரணையை சி.பி.சி.ஐ.டி விசாரணை பிரிவுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை அனைவரும் வைத்து வந்த நிலையில்., இந்த வழக்கானது நேற்று முதல் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. பெண்கள் அவர்களின் எதிர்காலத்தை கருதி புகார் மனுக்கள் வழங்க மறுத்துள்ளதாக தகவல் வெளியான நிலையில்., இது குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நேரத்தில்., இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட பெண்கள் தங்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும்., வரும் மிரட்டலுக்கு பயந்தும்., சொந்த ஊரை விட்டு வெளியேறுவதாகவும்., பலர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வரை சுமார் 10 பெண்கள் தற்கொலை செய்துகொண்டதாகவும்., இந்த பிரச்சனையை காவல் துறையினர் முடிவிற்கு கொண்டு வருவதற்காக வியாதி மற்றும் குடும்ப பிரச்சனையை மையப்படுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட சமயத்திலேயே இந்த விஷயங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ள நிலையில்., முழு விசாரைணயில் இது போன்ற பல விஷயங்கள் வெளிவரலாம் என்ற அதிர்ச்சி தகவலும் கிடைத்துள்ளது.
English Summary
in pollachi girl miss used case 10 girls attempt suicide