பணியை முடித்து திரும்பி., இரத்த வெள்ளத்தில் மனைவியை துடிக்க விட்ட கணவன்.! கதறிய பெண்., பீறிட்ட இரத்தம்.!! பதறிப்போன அக்கம்பக்கத்தினர்.!!
in erode husband killed wife due to illegal affair
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆப்பக்கூடல் அருகேயுள்ள பெரிய கள்ளியூர் காமநாயக்கன்பாளையத்தை சார்ந்தவர் தர்மன் (47)., இவர் விவசாயத்திற்க்கான லாரி ஒன்றை இயக்கும் பணி செய்து வருகிறார். இவரது மனைவியின் பெயர் விஜயசாந்தி (வயது 24).
இவர்கள் இருவருக்கும் கடந்த வருடம் திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில்., இவர்கள் இருவருக்கும் குழந்தை ஒன்று உள்ளது. மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட தர்மன்., அவர் மீதுள்ள சந்தேகம் அதிகப்படும் வகையில் விஜயசாந்தி அடிக்கடி அலைபேசியில் பேசியதை கண்டு தனது மனைவியை கண்டித்துள்ளார்.
இதன் காரணமாக இவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது. மேலும்., அடிக்கடி இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில்., நேற்று இரவு பணிக்காக வெளியே சென்று., இன்று அதிகாலையில் வீட்டிற்கு வந்த சமயத்தில் மனைவி அலைபேசியில் மீண்டும் பேசிகொண்டு இருப்பதை கவனித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தர்மன் மனைவியை திட்டவே.,, இருவருக்கும் வழக்கம் போல வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியுள்ளது. இதன் காரணமாக கடும் கோபத்தில் இருந்த அவர் ஆத்திரத்தில் களையெடுக்கும் மண்வெட்டியை எடுத்து மனைவியின் தலையில் ஓங்கி வெட்டியுள்ளார்.
இதன் காரணமாக தலை துண்டாகி., தலையில் இருந்து இரத்தம் பீறிட்டு வெளியே வந்த நிலையில்., சம்பவ இடத்திலேயே பரிதாபமாக விஜயசாந்தி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் விஜயசாந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்., தர்மனை கைது செய்த காவல் துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
in erode husband killed wife due to illegal affair