இங்க வந்த.. கடித்து தின்று விடுவேன்.! போலீசாரை அச்சுறுத்திய அம்மன்..!! தி.மலையில் பரபரப்பு..!!!
இங்க வந்த.. கடித்து தின்று விடுவேன்.! போலீசாரை அச்சுறுத்திய அம்மன்..!! தி.மலையில் பரபரப்பு..!!!
சென்னை, காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்கள் வழியாக 277 கி.மீ. தூரம் அமைய இருக்கும் 08 வழி பசுமை சாலைக்கு மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
இதில், திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு, வந்தவாசி, போளூர், ஆரணி மற்றும் செங்கம் வரையில் 122 கிலோ மீட்டர் தொலைவிற்கு விவசாய நிலங்கள், பாசன கிணறுகள், வீடுகளை கையகப்படுத்த அளவீடு பணி 90 சதவீத பணிகளை காவல்துறையின் உதவியுடன் விவசாயிகளை விரட்டியடித்து விட்டு, அதிகாரிகள் தங்கள் பணியை தொடர்ந்து வருகின்றனர்.
இரண்டு தினங்களுக்கு முன், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே எருமைவெட்டி எனும் கிராமத்தில் நிலம் எடுக்க நிலத்தினை அளந்து, நிலத்தில் அதிகாரிகள் கல்லை நட்டனர். அப்போது, நட்ட கல்லை பிடிங்கிவிட்டு என் நிலத்தில் இருந்து கிளம்புங்கள் என்று, பன்னிரெண்டாம் வகுப்பு பள்ளி மாணவி அம்மு தற்கொலைக்கு முயன்றார்.
ஆனால் அதிகாரிகள் இதனை பொருட்படுத்தாமல், கல்லை எடுக்க மறுத்துவிட்டனர். மேலும், மாணவி கையில் இருந்த பிளேடை பறிக்க போலீஸார் முற்பட்டனர். அப்போது, மாணவி அம்மு, ''என் உயிர் மீது எனக்கு அக்கறை இல்லை, எனக்கு விவசாயம்தான் முக்கியம்'' என்று கூறிய படியே தன் கழுத்தை அறுத்துக் கொண்டார். உடனடியாக போலீசார் அவரை மீட்டு அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இந்நிலையில், நேற்று திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் அருகே அரியப்பாடியில் நிலத்தினை அளவிட வந்த அதிகாரிகளை இளைஞர்கள் சூழ்ந்து கொண்டு பணியை தடுத்தனர். இதனையடுத்து போலீசார் அவர்களை விரட்டியடித்தனர். இதனால் ஆத்திரமடைந்த நிலத்தின் உரிமையாளர் சரஸ்வதி மற்றும் செந்தாமரை, அதிகாரிகளின் கையில் இருந்த நிலம் அளக்கும் கருவியை பிடுங்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, திடீரென செந்தாமரை தனது தலை முடியை கலைத்துவிட்டு ஆக்ரோஷமாக சாமியாடினார். சாமியாடும் போது அவர் கூறியதாவது, ''பசுமை வழிச்சாலைக்கு உத்தரவு போட்டது யார்? அந்த ஆட்சியாளர்கள் இங்கு வந்தால், அவர்களை கடித்து தின்று விடுவேன்'' என்று கத்திய படியே அவரின் நிலத்தில் உருண்டு புரண்டார்.
இதனை பார்த்து பயந்து போன அதிகாரிகள் நிலம் அளவீடு பணியை சிறிது நேரம் நிறுத்திவிட்டனர். இதனை பயன்படுத்தி அங்கு இருந்த கிராமத்து இளைஞர்கள் அளவீடு கற்களை பிடுங்கி வீசினர். அப்போது போலீசாருக்கும் இளைஞர்களுக்கு வாக்குவாதம் வந்தது.
வாக்குவாதத்தில் போது அந்த இளைஞர்கள் கூறியதாவது, ''எங்களுக்கு சோறு போடும் நிலம் தான் எங்கள் உயிர். அதனை பறிக்க அரசியல் சாசனப்படி உங்களுக்கு அதிகாரம் இல்லை. இப்படி விவசாயிகளை மிரட்டி அடி பணிய வைப்பது கண்டிக்கத்தக்கது. விவசாயமே நாட்டின் முதுகெலும்பு என்று சொல்லி விட்டு. ஆட்சியாளர்களே விவசாய நிலங்களையும், விவசாயிகளையும் அழித்துவிட்டு, எப்படி விவசாயத்தை பாதுகாப்பீர்கள்'' என்று கேள்வி எழுப்பினர்.
இவர்களின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய அதிகாரிகள் அவர்களை அப்புறப்படுத்திவிட்டு தங்கள் பணியை தொடர்ந்தனர்.
English Summary
green way road protest in thiruvannamalai