பாஜகவுடன் எந்தத் தேர்தலிலும் கூட்டணி இல்லை - பொதுவெளியில் போட்டுடைத்த முன்னாள் அமைச்சர்.!
formar minister jayakumar press meet in chennai vepperi
சென்னையில் உள்ள வேப்பேரியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- "மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் டிசம்பர் 5-ம் தேதி அஞ்சலி செலுத்த அனுமதிக்கோரி காவல்துறையிடம் கடிதம் அளித்துள்ளோம்.
பட்டியலின வேட்பாளர்களை பொதுத் தொகுதியில் நிறுத்தி வெற்றி பெறச் செய்து, சமூக நீதியை நிலை நாட்டியவர் ஜெயலலிதா. அவர் மத்திய அரசுக்கு கொடுத்த அரசியல் அழுத்தங்களால் தான் 69 சதவீத இடஒதுக்கீடு சாத்தியமானது.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் அதிருப்தியில் உள்ளதாக வரும் செய்திகளில் உண்மை இல்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி எழுச்சியுடன் உள்ளது. இன்னும் மூன்று மாதத்தில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும்.
ஆனால், பாஜகவுடன் எந்தத் தேர்தலிலும் கூட்டணி இல்லை. அதிமுகவின் அடித்தளம் வலுவாக உள்ளது. தற்போது, பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது" என்று பேசியுள்ளார்.
English Summary
formar minister jayakumar press meet in chennai vepperi