போக்கு காட்டும் சிறுத்தை எங்கே? வனத்துறையின் லேட்டஸ்ட் அப்டேட்.!! - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறையில் கடந்த ஆறு நாட்களாக பதுங்கி போக்கு காட்டி வரும் சிறுத்தை பிடிக்க வனத்துறையினர் தீவிரம் காட்டி வரும் நிலையில் காவிரி, பழைய காவேரி, மஞ்சளாறு நீர் வழி புதர்களில் சிறுத்தையின் எச்சம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தற்போது வெயில் சுட்டெரித்து வருவதால் நீர் தேவைக்காகவும் கடுமையான வெயிலை சமாளிக்கவும் நீர் வழி தூதர்களில் சிறுத்தை பதுங்கி இருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதன் காரணமாக நீர் வழி தடங்களில் சிறுத்தை பிடிப்பதற்காக வனத்துறையினர் கூண்டு அமைத்துள்ளனர். இதனால் பொதுமக்கள் யாரும் நீர் வழித்தடங்கள் பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் கால்நடைகளையும் அப்பகுதிக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. 

மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் சிறுத்தை இருப்பது தென்பட்டால் 93608 89724 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Forest dept found mayiladuthurai leopard location


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->