ஈரோடு அருகே பரபரப்பு - வேற்று சமூகத்தைச் சேர்ந்த மருமகனைக் கொள்ள முயன்ற மாமனார்.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் அருகே எரங்காட்டூர் குருவாயூரப்பன் நகரைச் சேர்ந்த சுபாஷ், தனது தங்கை ஹாசினியை பள்ளியில் விடுவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, இவர்கள் மீது வேன் ஒன்று வேகமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் அண்ணன் தங்கை இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அந்தத் தகவலின் படி போலீசார் விரைந்து வந்து இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், சுபாஷ் சத்தியமங்கலம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவரது மகள் மஞ்சு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் சந்திரன் இவர்களது காதல் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

மேலும், சந்திரன், சுபாஷை கொலை செய்ய முடிவு செய்து, நேற்று காலை தங்கையுடன் சென்ற சுபாஷின் வாகனத்தின் மீது வேனை மோதச் செய்தது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து போலீசார் தலைமறைவாகியுள்ள சந்திரன் மற்றம் அவரது மனைவி சித்ரா உள்ளிட்ட இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

father in law tried kill son in law in erode


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->