#செங்கல்பட்டு || மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்.. மருத்துவர் கஜேந்திரன் பணியிடை நீக்கம்..!! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவ கல்லூரியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் சுமார் 2 மணி அளவில் மூன்றாம் ஆண்டு மருத்துவம் படித்து வரும் பயிற்சி பெண் மருத்துவர் ஒருவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் கஜேந்திரன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி அரசு மருத்துவமனை முதல்வரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் மீது கல்லூரி முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் 30க்கும் மேற்பட்டோர் நேற்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ மாணவிகள் "செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் பயிற்சி மருத்துவ மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகவும், மாணவிகளிடம் ஆபாசமாக பேசுவதாகவும்" குற்றம் சாட்டியிருந்தனர். 

இந்த நிலையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பயிற்சி மருத்துவர்களிடம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையின் முதல்வர், நிலைய மருத்துவ அலுவலர், செங்கல்பட்டு நகர காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு வெட்டப்படாததால் பயிற்சி மருத்துவர்கள் தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதன் காரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டிருந்த பலர் சிகிச்சை பெற முடியாமல் பாதிப்புக்கு ஆளாகினர். இந்த நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர் கஜேந்திரன் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பெண் பயிற்சி மருத்துவருக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகம் அரசு மருத்துவர் கர்ஜேந்திரன் மீது நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Doctor Gajendran suspended for sexually harassing a student


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->