விபத்தில் சிக்கிய பெண்! காரை நிறுத்திய அன்புமணி இராமதாஸ்! நெகிழ்ச்சி சம்பவம்!
Dharmapuri Accident PMK Anbumani Ramadoss video viral
சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கிய பெண்ணை மீட்ட பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ், அவரை தான் மத்திய அமைச்சராக இருந்தபோது கொண்டுவந்த 108 வாகனத்தில் அனுப்பிவைத்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் பா.ம.க. கட்சி நிர்வாகியின் இல்ல திருமண விழாவுக்கு காரில் கட்சி நிர்வாகிகளுடன் அன்புமணி இராமதாஸ் வந்து கொண்டிருந்தார்.
சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை 9 மணியளவில் குண்டல்பட்டி கூட்ரோடு அருகே அன்புமணி இராமதாஸ் வந்தபோது, இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் விபத்தில் காயங்களுடன் ரோட்டில் அமர்ந்து இருந்தனர்.
இதனை பார்த்த அன்புமணி இராமதாஸ், உடனே காரை நிறுத்தி, கீழே இறங்கி சென்று காயம் அடைந்த பெண்ணுக்கு தண்ணீர் கொடுத்து, ஆறுதல் கூறினார்.
மேலும், 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்து, அந்த பெண்ணையும், காயம் அடைந்த மற்றவரையும் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இந்த விபத்து குறித்து மதிகோண்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது. பலரும் அன்புமணி இராமதாஸ் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Dharmapuri Accident PMK Anbumani Ramadoss video viral