எங்கிருந்து வந்தது, நீரிழிவு நோயை பரப்ப திட்டமா ..? நல்லா இருக்கு என்று தொடர்ந்து வாயில் போட்டு மெல்ல,நாளடைவில் அடிமையாகியே விட்டோம்..!
ருசிக்கு நமது நாக்கு அடிமையாகி போனதால் எல்லோரும் புரோட்டாவை நோக்கி செல்ல, இப்போது பட்டி தொட்டி எல்லாம் புரோட்டா கடையாக மாறி விட்டது.
மனிதன் சாப்பிடுவதற்கு கொஞ்சம் கூட பயனற்ற பொருளான மைதா மாவினால் இந்த புரோட்டா தயார் செய்யப்படுகிறது.
மைதா மாவு கோதுமையில் இருந்துதான் தயாரிக்கப்படுகிறது. ஆனால், கோதுமையில் உள்ள நன்மை செய்யும் விஷயங்கள் எல்லாம் நீக்கப்பட்டு தயாரிக்கப்படும் வெறும் சக்கைதான் இந்த மைதா மாவு.
மைதா மாவு முழுமையாக தயாரிக்கப்படும் முன்பு மஞ்சள் நிறமாக இருக்கும். அதை வெள்ளையாக மாற்றுவதற்காக இவர்கள் செய்யும் வேலைய பாருங்க..
பென்சாயில் பெராக்சைடு என்ற ரசாயனம் கொண்டு வெள்ளையாக மாற்றும் வேலையை செய்கிறார்கள்.
தலைமுடிக்கு அடிக்கப்படும் ‘டை’யில் இந்த ரசாயனம் கலக்கப்படுகிறது. பினாயில், பிளீச்சிங் பவுடர்களிலும் இது இருக்கிறது. இதை தொடர்ச்சியாக உண்டால் நீரிழிவை ஏற்படுத்தும்
மைதா மாவை சாப்ட் ஆக்குவதற்காக ‘அலாக்சான்’ என்ற ரசாயனம் கலக்கப்படுகிறது. நோய்களுக்கு மருந்து கண்டுபிடிப்பதற்கு, எலியை பரிசோதிக்க இதை பயன்படுத்துவார்கள்.
எலிகளுக்கு கொடுக்கப்படும் அதே அலாக்சான் மைதாவில் கலக்கப்படுவதால் அதை சாப்பிடும் போது, நமக்கும் டையாபிட்டிஸ் உண்டாகும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்..