ஓபிஎஸ் கலந்துகொண்ட கும்பாபிஷேகத்தில்.. 34 சவரன் நகைகள் பறிப்பு..! சிசிடிவி காட்சிகள் வெளியீடு..!!
ஓபிஎஸ் கலந்துகொண்ட கும்பாபிஷேகத்தில்.. 34 சவரன் நகைகள் பறிப்பு..! சிசிடிவி காட்சிகள் வெளியீடு..!!y in theni district
தேனி மாவட்டத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்திய கொள்ளை சம்பவம்; அம்பல படுத்திய சிசிடிவி காட்சிகள்
தேனி மாவட்டம் பெரியகுளம் வராகநதியின் தென் கரையில் அமைந்துள்ளது பெரியகோவில் எனப்படும் பாலசுப்பிரமணியர் திருக்கோவில். ராஜேந்திர சோழன் காலத்தில் கட்டப்பட்டு பல வருடங்களாக பராமரிப்பின்றிக் கிடந்த இக்கோவிலை தற்போது தான் சீரமைத்தனர்.
பராமரிப்புப் பணிகள் முடிவடைந்த நிலையில், கடந்த 25-ம் தேதி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், தேனி மாவட்டத்தின் பல இடங்களிலிருந்து வந்திருந்த பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர். அப்போது கூட்டத்தில் புகுந்த ஒரு கும்பல் பெண்களிடமிருந்து தங்கச் செயின்களைத் திருடினர். கூட்ட நெரிசலை பயன்படுத்திக் கொண்டு 34 சவரன் நகைகள் திருடப்பட்டதாக புகார் எழுந்தது.
இந்தச் சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தென்கரை காவல் துறையினர் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையில் இறங்கினர்.
கோவிலைச் சுற்றிப் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர் செயின் திருட்டில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டுள்ளனர். அவர்களின் படங்களை வெளியிட்டுள்ளனர். படத்தில் குறிப்பிட்டுள்ளவர்கள் பற்றிய தகவல் அறிந்தால், உடனே காவல்துறைக்கு தெரிவிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த கும்பாபிஷேகத்தில் தமிழக துணை முதலமைச்சரும் கலந்துகொண்டதது குறிப்பிடத்தக்கது.
English Summary
chain robbery in theni district