வாலிபருக்கு திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம்.! செல்போனால் நேர்ந்த விபரீதம்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் வீட்டு மாடியில் நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்த வாலிபர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி ராமச்சந்திரன் (30). இவர் நேற்று இரவு வீட்டு மாடியில் நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி மாடியிலிருந்து ராமச்சந்திரன் கீழே, விழுந்துள்ளார். மேலும் இவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து கிண்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த ராமச்சந்திரன் உடலை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A youth died after falling from the house floor in chennai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->