திருட சென்ற இடத்தில் அவசரம்.! கழிவறையில் ஒதுங்கிய திருடனை "அரிசி புடைத்தார் போல" புடைத்தெடுத்த ஓட்டுனர்கள்.!! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் உள்ள சீலநாயக்கன்பட்டியில் தனியாருக்கு சொந்தமான பேருந்து நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்திற்குள் நேற்று இரவின் போது 30 வயதுடைய வாலிபர் சுவர் ஏறி குதிப்பதை அங்குள்ள பேருந்து ஓட்டுனர்கள் கவனித்தனர். 

இவர்கள் கவனித்ததை கண்டுகொண்ட அந்த வாலிபர் உடனடியாக அக்னிருந்த கழிவறைக்குள் சென்று செய்வதறியாது உள்ளேயே இருந்துள்ளார். அந்த வாலிபரை கண்டவுடன் அங்கிருந்த ஓட்டுனர்கள் அனைவரும் கழிவறைக்கு விரைந்தனர். 

கழிவறையில் நீண்ட நேரம் இருந்த அந்த வாலிபர் வெளியே வராமல் ஒரு போராட்டமே அங்கு நிகழ்த்திவிட்டார். நீண்ட நேரத்திற்கு பின்னர் கழிவறையில் இருந்து வெளியே வந்த வாலிபரை பிடித்து அடித்து நொறுக்கினர். 

அந்த வாலிபரிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் வாயை திறக்காததால்., சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அந்த வாலிபரிடம் விசாரணை மேற்கொண்டனர். 

காவல் துறையினரின் விசாரணைக்கும் அந்த வாலிபர் வாயை திறக்காததால்., அவர் ஊமையா? அல்லது ஊமை போல நடிக்கிறாரா? என்பது குறித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A THIEF IS HANDLED BY BUS DRIVERS


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->