திருமணம் வேண்டாம் என்று கூறிய மகன்., ஏற்பாடு செய்த தந்தை.! வீட்டை விட்டு தலைதெறித்தோடிய மகன்.!! கண்ணீரில் குடும்பத்தினர்.!!  - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாரை அடுத்துள்ள பொக்கசமுத்திரம் கிராமத்தை சார்ந்தவர் ஏழுமலை (50)., இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மகனின் பெயர் ஆனந்தன் (வயது 27).

ஆனந்தன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஓரகடத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்., இவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதால் இவருக்கு பெற்றோர்கள் பெண் பார்த்து வந்துள்ளனர். 

திருமணத்திற்கு பெண் பார்க்க விருப்பம் இல்லாத நிலையில்., திருமணம் வேண்டாம் என்று கூறிவந்த இவரது பேச்சை தட்டிக்கழித்து விட்டு., ஆனந்தனின் தந்தை அவருக்கு பெண் பார்த்து வந்தார். 

இவரது உறவினரின் பெண் ஒருவரை பார்த்து அவருடன் நிச்சியம் ஏற்பாடு செய்துள்ளனர். இதனை கடுமையாக கண்டித்த ஆனந்தன் அந்த நேரத்தில் பெற்றோரின் வற்புறுத்தலால் நிச்சியத்தில் கலந்து கொண்டார். 

நிச்சியத்தை முடித்து விட்டு வீட்டை விட்டு வெளியேறிய இவரை காணாமல் பெற்றோர்கள் அவர்களுக்கு தெரிந்த இடத்தில் தேடி அலையவே., இதனை நாட்களாய் தனது மகன் குறித்த தகவல் தெரியாததால் சம்பவம் குறித்த காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு ஆனந்தனை தேடி வருகின்றனர். திருமணம் பிடிக்காமல் மணமகன் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவலறிந்த மணமகள் வீட்டினர் கண்கலங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a son escaped from house when to arrange her marriage festival starting from her father


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->