சென்னை சூப்பர்கிங்ஸ் அணியில் விளையாடும் பிரபல இந்திய அணி வீரரின் மனைவியை ரோட்டில் வைத்து தாக்கிய போலீஸ்!.
இந்திய அணி வீரரின் மனைவியை நடுரோட்டில் வைத்து அடித்த பொலிஸ்.
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி மீது தாக்குதல் நடத்திய பொலிசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா தற்போது ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
குஜராத் மாநிலம் ஜாம்நகர் பகுதியில் ஜடேஜாவின் மனைவி ரிவபா காரில் தனது குழந்தையுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர் சென்ற கார் முன்பு சென்று கொண்டிருந்த சஞ்சய் அகிர் என்கிற பொலிஸ் ஒருவரின் பைக் மீது மோதியது.
பைக் மீது கார் மோதியதில்பொலிஸ் சஞ்சய் அகிர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். பின்னர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவபா காரை விட்டு இறங்கினார். அப்போது கோபமடைந்த பொலிஸ் சஞ்சய், ஜடேஜா மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார். பொதுமக்கள் அவரை தடுக்கும் வரை தொடர்ந்து தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் ஜடேஜாவின் மனைவி காயமடைந்தார். பின்பு அந்த இடத்தில பொதுமக்கள் கூடினர்.
பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உயர் அதிகாரிகள் விரைந்து வந்து ஜடேஜா மனைவியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெண் மீது தாக்குதல் நடத்தியதாக பொலிஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
English Summary
The police who beat the Indian team's wife on the road.