இறுதிப்போட்டியில் விளையாடியது மிகப்பெரிய சாதனை - இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா.! - Seithipunal
Seithipunal


உலக பெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த ஜூன் 7-ம் தேதி முதல் இன்று வரை நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்ஸில் அபாரமாக விளையாடிய ஆஸ்திரேலியா அணி 469 ரன்கள் குவித்தது.

அதனைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் தடுமாறி 296 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் முதல் இன்னிங்சில் 173 ரன்களுடன் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா அணி 2வது இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.‌ 

இதன் மூலம் இந்திய அணிக்கு 444 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதில் இந்திய அணி நேற்று நான்காம் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்திருந்தது.

இதனையடுத்து இன்று கடைசி நாள் தொடங்கிய நிலையில் இந்திய வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். இறுதியாக இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 234 ரன்கள் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆசிரியர்கள் 209 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.

இதனையடுத்து தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேசியதாவது, மைதான சூழ்நிலையில் டாஸ் வென்று முதலில் பந்து வீசினோம். அந்த வகையில் நாங்கள் முதலில் பதிவு செய்து சரியான முடிவு என நான் நினைத்தேன். அதேபோல் முதல் நாள் பாதியில் நாங்கள் சிறப்பாக பந்து வீசினோம்.

‌ ஆனால் அதன் பின் ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன் சிறப்பாக விளையாடினர். கடந்த 2 ஆண்டுகளாக கடுமையாக உழைத்தோம். இரண்டு முறை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடியது எங்களுக்கு சிறந்த சாதனை தான். ஒட்டுமொத்த அணியாக சிறப்பான முயற்சி மேற்கொண்டோம். ஆனால் துரதிஷ்ட வசமாக இறுதிப்போட்டியில் எங்களால் வெற்றி பெற முடியவில்லை‌. 

டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியை 3 போட்டிகள் கொண்ட தொடராக நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rohit Sharma speech about WTC final


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->