இதெல்லாம் சரி தானா தோனி! கறாராக பேசும் கவுதம் காம்பிர்!  - Seithipunal
Seithipunal


இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம் கம்பீர், இந்தியாவுக்காக தோனி தன் விருப்பத்திற்கு இந்தத் தொடரில் ஆடுவேன், அடுத்த தொடரிலிருந்து ஆடமாட்டேன் என்று முடிவெடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக கம்பீர் கூறியதாவது, " என்னை பொறுத்தவரைக்கும் எப்போதுமே ஒன்றில் தெளிவாக இருக்கிறேன். ஓய்வு அறிவிப்பது என்பது தனிப்பட்ட ஒரு வீரரின் முடிவு. ஒருவரின் ஓய்வு  குறித்து அணித்தேர்வுக்குழுவினர் தான் பேசி முடிவெடுக்க வேண்டும். தோனியிடம் பேசி எதிர்கால முடிவு என்ன திட்டம் என்ன என்பதை விவாதிக்க வேண்டும் என கூறியுள்ளார். 

மேலும் என்னைப் பொறுத்தவரையில் இந்தியாவுக்காக ஆடும் ஒரு வீரர், தன் விருப்பத்திற்கு இந்தத் தொடரில் ஆடுவேன், அடுத்த தொடரிலிருந்து ஆடமாட்டேன் என்று முடிவெடுக்க முடியாது. அதனால் தோனி விவகாரத்தில் முடிவு எடுக்க வேண்மடுமென தெரிவித்திருந்தார். இத்தேகருத்தினை கங்குலி, கும்ப்ளே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் ரிஷப் பந்த் பற்றி காம்பிர் கூறும்போது, “ரிஷப் பந்த்தின் ஷாட் தேர்வு எப்போதும் சரியாகவே இருந்து விடாது என்பதை அணி நிர்வாகம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அவரது ஆட்டம் சூடுபிடிக்கும் நாளில் அவர் வெற்றிகரமான வீரராக வருவார் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gambhir slams dhoni


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->