சமயபுரம் மாரியம்மன் கோவில்..சித்திரை திருவிழா ஆரம்பம்!! - Seithipunal
Seithipunal


ஞாயிற்றுக்கிழமையான இன்று திருச்சி மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. 

அம்மன் தளங்களில் மிக முக்கியமான தலமாக விளங்குகிறது சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில். இக்கோவிலுக்கு பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளது. பக்தர்களுக்கு கேட்டது கிடைக்கும்  திருத்தலமாக செயல்படுகிறது சமயபுரம் மாரியம்மன் கோவில்.

வருடவருடம் மாசி கடைசி ஞாயிறு முதல் பங்குனி கடைசி ஞாயிறு வரை தனி பெரும் சிறப்பாக விளங்குகிறது இத்திருத்தலம். கொடியேற்றத்தை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மன் ஒவ்வொரு வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது . 

இன்று நடைபெற்ற கொடியேற்று நிகழ்வில் பல்வேறு தரப்பு மக்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

start as samayapuram mariyamman festival


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->