இது தீர்க்கவேண்டிய பிரச்சனைதான்... - சீமான் பரபரப்பு கருத்து
NTK Seeman interview
சென்னை, நுங்கம்பாக்கத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது இளையராஜா, வைரமுத்து விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர்,
இளையராஜா என் தகப்பன்கள். ஒரு படைப்பாளியாக இளையராஜாவுக்கு ஒரு அங்கீகாரம் தேவை. இசை, பாடல்கள், வரி இவை அனைத்தும் முக்கியம் தான்.
அவற்றை பிரித்து பார்க்கக் கூடாது. இளையராஜா உரிமையை தான் கேட்கிறார். மற்றவர்களுக்கு உரிமையை தரக் கூடாது என தெரிவிக்கவில்லை.
இளையராஜா, வைரமுத்து பிரச்சனை தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனை தான். படத்தை ஒரு முறை வாங்கி விட்டால் வாழ்நாள் முழுவதும் உரிமை வைத்துக் கொள்வது சரி கிடையாது. மொழி உடல் என்றால் உயிர் இசை என தெரிவித்துள்ளார்.
.