தகுதி இருக்கு.. 3 சீட் கேட்கிறோம்... சீறும் திருமாவளவனால் கூட்டணியில் பூகம்பம்.!! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தலில் கர்நாடக ஆந்திரா கேரளா தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடுவது  குறித்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தென்னிந்திய நிர்வாகத்துடன் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது திமுக உடனான கூட்டணி பேச்சு வார்த்தை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர் "திமுகவில் இருந்து அதிகாரப்பூர்வ அழைப்பு இன்னும் வரவில்லை. எங்களுக்கு இருக்கு தகுதி அடிப்படையிலேயே 3 தொகுதிகளை கேட்கிறோம்.

முதற்கட்ட பேச்சுவார்த்தை மட்டுமே தற்போது முடிந்துள்ளது. இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில்தான் சூழலுக்கு ஏற்ப கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு முடிவுகள் எடுப்போம். தேவைப்பட்டால் முதல்வர் மு.க ஸ்டாலினை நேரில் சந்திப்போம். எங்கள் பலம் அறிந்துதான் கோரிக்கையை முன் வைத்துள்ளோம்‌. பானைச்சின்னத்தில் விசிக போட்டியிடும்" என‌ கறாராக பதில் அளித்துள்ளார் திருமாவளவன்.

திமுகவின் முக்கிய கூட்டணி கட்சியான விசிகவுக்கு இன்னும் அழைப்பு விடுக்கப்படாதது கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே போன்று காங்கிரஸ் உடனும் திமுகவின் தொகுதி பங்கீடு உறுத்தியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thirumavalavan said vck had capacity to contest 3 seats in pot symbol


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->