மொத்தம் 40 கோடி.!! சிக்கலில் சிக்கிய திருமா.?! - Seithipunal
Seithipunal


கடந்த இரு தினங்களுக்கு முன் திருச்சி அருகே விசிக மாநில பொறுப்பாளரின் கார் கதவு இடுக்கில் இருந்து, தேர்தல் பறக்கும் படையினர் 2.1 கோடி ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர். இந்த பணம் அனைத்தும் வாக்காளர்களுக்கு கொடுக்க எடுத்து செல்லப்பட்டதா என்று விசிக்கவை சேர்ந்த மூவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

சிதம்பரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திருமாவளவன் அந்த தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று பரங்கிப்பேட்டை அருகே உள்ள ஆயிபுரம் கிராமத்தில் பிரச்சாரம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, ''சிதம்பரம் தொகுதியில் என்னை தோற்கடிக்க அதிமுக-பாஜக 40 கோடி ரூபாய் செலவு செய்ய திட்டமிட்டுள்ளது. திருச்சியில் எங்கள் கட்சியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் காரை சோதனையிட்டு அவர் தொழிலுக்காக வைத்திருந்த பணத்தை பறிமுதல் செய்துள்ளது. இதில் எனக்கும் கட்சிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை'' என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thiruma talk about admk and bjp


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->