முதல்வரின் பேச்சிக்கு பதிலடி தந்த நாம் தமிழர் கட்சியினர்...!! - Seithipunal
Seithipunal


சீமானுக்கு போராட மட்டும்தான் தெரியும். பிரச்னைகளுக்கான தீர்வு சொல்லத் தெரியாது என்று விமர்சித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, தங்கள் தேர்தல் செயற்பாட்டு வரைவு அறிக்கையைப் படித்துவிட்டு பேசுமாறு நாம் தமிழர் கட்சியினர் சவால் விடுத்துள்ளது. 

காவிரி விவகாரத்தில் தொடர்ந்து தமிழகத்தில் போராட்டங்கள் நடந்து வருவதாகவும், அது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி இருந்தார். 

இந்த விமர்சனத்திற்கு பதில் சொன்ன தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சீமானுக்குப் போராட மட்டுமே தெரியும். ஆனால், பிரச்னைகளுக்குத் தீர்வு சொல்லத் தெரியாது என்று கருத்து தெரிவித்து உள்ளார். 

முதல்வரின் இந்தக் கருத்துக்கு, ட்விட்டரில் நாம் தமிழர் கட்சியினர் பதிலடி கொடுத்துள்ளனர். அதில், கடந்த சட்டசபைத் தேர்தலின் போது, நாம் தமிழர் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் செயற்பாட்டு வரைவு அறிக்கையை படித்துவிட்டு கருத்து கூறுங்கள் முதல்வரே ! என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamil nadu cm with ntk


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->