அண்ணா உருவாக்கிய திமுகவில் உதயநிதியின் உழைப்பு என்ன..?! எஸ்.பி வேலுமணி கேள்வி..!! - Seithipunal
Seithipunal


தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது தொடர்பாக அதிமுக நிர்வாகிகளுடன் கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்பொழுது பேசிய எஸ்.பி வேலுமணி "உதயநிதியை அமைச்சராக்கியது தான் திமுக செய்த மிகப்பெரிய சாதனை. ஸ்டாலின் எதை செய்ய மாட்டேன் என சொல்கிறாரோ அதை தான் செய்வார். 

தனது மகனும் மருமகனும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என்றார், இன்று உதயநிதிக்கு முடிச்சிட்டு விழா நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சியில் மிட்டா மிராசுதாரர்கள் பதவிக்கு வருவதை விட திமுகவில் மோசமாக நடக்கிறது. பேரறிஞர் அண்ணாதுரை உருவாக்கிய திமுக இன்று குடும்ப சொத்தாக மாறி உள்ளது. 

ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது சட்டசபையில் உதயநிதியின் புகழ் பாடுவது தாங்க முடியாது. இப்பொழுது அமைச்சராகிவிட்டார் இன்னும் என்னென்ன நடக்கப் போகிறதோ...!! மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் திமுகவில் உதயநிதியின் உழைப்பு என்ன..?? 

அதிமுகவினரை மிரட்டி திமுகவில் இணைக்கின்றனர். எந்த கொம்பனாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது. அதிமுகவை எம்ஜிஆர் உருவாக்கினார், ஒன்றை கோடி தொண்டர்களாக கட்சியை ஜெயலலிதா வளர்த்தார். தமிழகத்தில் மீண்டும் அதிமுகவின் ஆட்சி அமையும்" என பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SP Velumani Questioned What is Udayanidhi work in DMK


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->