ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் சசிகலா இன்று முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம்.!
Sasikalaa travelling to Erode and Thirupur
தமிழகம் முழுவதும் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொண்டு தனது ஆதரவாளர்களை சந்தித்து பேசி வருகிறார். அந்த வகையில் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் அவர் இன்று முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
அதன்படி இன்று காலை 11 மணியளவில் சென்னை தி நகர் வீட்டிலிருந்து புறப்படும் சசிகலா கோவை வழியாக ஈரோடு புறநகர் மாவட்டத்தில் உள்ள பவானி அந்தியூர் பிரிவுக்கு மாலை 4 மணி அளவில் வருகிறார். அங்கு அவருக்கு ஆதரவாளர்கள் வரவேற்பு அளிக்கின்றனர்.
அங்கிருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்கும் சசிகலா கவுந்தப்பாடியில் நால்ரோடு, கோபிசெட்டிபாளையம் எம்ஜிஆர் திடல் மற்றும் கணக்கம்பாளையம் ஆகிய பகுதிகளில் தனது ஆதரவாளர்களையும் சந்தித்து பேசுகிறார். அதன் பின்னர் திருப்பூர் செல்லும் சசிகலா அன்று இரவு அங்கு தங்கி ஓய்வெடுக்கிறார்.
அதன் பின்னர் நாளை மாலை 4 மணிக்கு திருப்பூர் மாவட்டம் வளர்மதி பேருந்து நிலையத்திலிருந்து தனது பயணத்தை தொடங்கும் சசிகலா திருமுருகன் பூண்டி நகராட்சி அலுவலகம், அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே தனது ஆதரவாளர்களை அருகே தனது ஆதரவாளர்களை சந்தித்து பேசுகிறார்.ஈ
English Summary
Sasikalaa travelling to Erode and Thirupur