அதிமுகவின் பொதுச் செயலாளர் யார்.? சசிகலா வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு.!! - Seithipunal
Seithipunal


முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவின் இடைக்கால பொது செயலாளர் சசிகலாவும் மற்றும் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

சசிகலா கர்நாடக சிறையில் அடைக்கப்பட்ட பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டு அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. மேலும் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அதிமுகவின் பொதுக்குழுவால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நீக்கப்பட்டனர்.

இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா சார்பில் உரிமையியல் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் செந்தில்குமார் மற்றும் சுப்பிரமணியன் ஆகியோர் அமர்வின் முன்பு விசாரணை நடைபெற்று வந்தது.

அப்போது கடந்த 2016 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளின் நடைபெற்ற பொது குழு கூட்டங்கள் தலைமைக் கழகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளதாகவும் அதிமுக சார்பில் வாதிக்கப்பட்டது.

அதேபோன்று ஓபிஎஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கடந்த 2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளர் பதவி நீக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டதால் அதே நிலை தற்போது வரை நீடிப்பதாக வாதிட்டார்.

எடப்பாடி பழனிச்சாமி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டு பொதுச்செயலாளர் பதவி மீண்டும் கொண்டுவரப்பட்டது.

அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கட்சியின் உச்சபெற்ற அதிகாரம் கொண்ட பொது குழு விதிகளின்படி கூடி தீர்மானம் நிறைவேற்றியதால் வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என வாதிடப்பட்டது. கடந்த 3 நாட்களாக இறுதிக்கட்ட விசாரணை நடைபெற்று வந்தது. இன்று அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கை தள்ளி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sasikala AIADMK general secretary case verdict adjourned


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->