"பலாப்பழம் அழுகி போகும்"; ஓபிஎஸ்-க்கு எதிராக கொந்தளிக்கும் பாஜக.!! காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகக்கும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு பாஜக ராமநாதபுரம் தொகுதியை மட்டும் ஒதுக்க நிலையில் அத்தகுதியில் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார்.

சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கியுள்ள ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக பாஜக தலைவர்கள் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த நிலையில் நேற்று இரவு பாஜக மாவட்ட தலைவருக்கும் ஓபிஎஸ் அணியினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. 

ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவராக இருக்கும் தரணி முருகேசன் என்பவருக்கும் ஓபிஎஸ் அணியினருக்கும் இடையே பணம் பட்டுவாடா தொடர்பாக ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் அழுகிய வீதிகளில் இறங்கி அழுகிய பலாப்பழம் என ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிராக கோஷமிட்டதால் பதட்டமான சூழல் நிலவியது.

ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஒதுக்கப்பட்ட ஒரே ஒரு தொகுதியில் கூட கூட்டணிக்குள் முரண்பாடு ஏற்பட்டிருப்பது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. ஏற்கனவே முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக 4 ஓ.பன்னீர்செல்வங்கள் களம் இறங்கியுள்ள சூழலில் தற்போது பாஜகவினர் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிராக திரும்பி இருப்பது அவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS supporters attack on Bajra ka leader Dharani Murugesan


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->