திடுக்கிடும் தகவல்! கோவையை தொடர்ந்து திண்டுக்கல்லில் வீடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட குட்கா ஆலையால் பரபரப்பு?!
திடுக்கிடும் தகவல்! கோவையை தொடர்ந்து திண்டுக்கல்லில் வீடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட குட்கா ஆலையால் பரபரப்பு?!
கடந்த சில மாதங்களாகவே, திண்டுக்கல் மாவட்டம் முழுவதும், குட்கா சாதாரண பெட்டிக் கடைகளி்ல் கூட தாராளமாகக் கிடைத்தது. இதனை எல்லாம், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கைப்பற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் அவர்களுக்கு, திண்டுக்கல்லில், நீண்ட காலமாக, குட்கா ஆலை ரகசியமாக செயல்பட்டு வருவதாக தகவல் கிடைத்தது. இதன்படி, நேற்று, திண்டுக்கல்லில் உள்ள மேட்டுப்பட்டி ரோடு, ராமர் தோட்ட காலனியில் தனியாருக்கு சொந்தமாக குடோனில், அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது, அந்த குடோனில், புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் அடங்கிய மூட்டைகள் அதிக அளவில் இருந்தது கண்டு பிடிக்கப் பட்டது. மேலும், அந்த குடோன் மற்றும், அதனை ஒட்டி இருந்த வீடுகளில் சோதனையிட்ட போது, குட்கா தவிர, எண்ணற்ற போதைப் பொருட்கள், அங்கு மூடை மூடையாக பதுக்கி வைக்கப் பட்டது, தெரிய வந்தது.
அந்த குடோன் உரிமையாளர், அதிகாரிகளைக் கண்டதும் தப்பி ஓடி விட்டார். அங்கு இரண்டு பெண்கள் வேலையாட்களாக இருந்தார்கள். அவர்களிடம் அதிகாரிகள் விசாரித்த போது, இந்த குடோனில் நீண்ட காலமாக குட்கா உள்ளிட்ட பல போதை வஸ்துக்களை தயார் செய்து, பல் வேறு கம்பெனி பெயர்களில், பேக் பண்ணி, இந்தியாவில் உள்ள பல பகுதிகளுக்கும் அனுப்பி வந்துள்ளனர் என்பது தெரிய வந்தது.
English Summary
one more gutka factory found in dindigul