அந்தர் பல்டி யாதெனில்.., திமுக எம்.பி.,யை பங்கம் செய்த தமிழ் நடிகை! - Seithipunal
Seithipunal


சூத்திரர்கள் விபசாரி மகன் என்று, திமுக எம்.பி., ஆ ராசா பேசியது, இந்து மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

மேலும், திமுகவிலும் 90% இந்துக்கள், சூத்திரர்கள், அமைச்சர் உள்ளிட்ட பதவிகளில் இருப்பதால், சொந்த கட்சியிலேயே கடும் விமர்சனங்கள் எழுந்ததாக சொல்லப்படுகிறது. 

இப்படி பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பவே, ஆ ராசா தனது டிவிட்டர் பக்கத்தில், "சூத்திரர்கள் யார்? அவர்கள் இந்துக்கள் இல்லையா? மனுஸ்மிருதி உள்ளிட்ட நூல்களில் ஏன் இழிவுபடுத்தப்பட்டு, கல்வி–வேலைவாய்ப்பு-கோவில் நுழைவு மறுக்கப்பட்டது. 

அரசியல் அதிகாரத்தாலும் – பரப்புரையாலும் 90% இந்து மக்களின் இவ்வுரிமைகளை மீட்ட திராவிட இயக்கம் எப்படி இந்துக்களுக்கு எதிரியாகும்" என்று விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில், பிரபல தமிழ் நடிகையும், அரசியல் விமர்சகருமான கஸ்தூரி, ஆ ராசாவின் விளக்கத்தை விமர்சித்து, தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அதில், "அந்தர் பல்டி யாதெனில்.... 😁

எந்த அரசனை விடவும், ராஜாவை விடவும் இந்து மதம் பெரியது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.

நேற்று இவர் சூத்திரன் விபசாரி மகன் என்று திட்டியது சொந்த கட்சியினரையும் குடும்பத்தினரையுமே அதிகம் பாதித்தது.

எனவே இப்போது பாதுகாப்பான நேர சோதனை பொய்களை நாடுகின்றனர்." என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kasturi say about A Rasa twit


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->