ஈரோடு மண்டல அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் நியமனம்.!!
Erode Zone AIADMK IT wingUnit Adminis appointed
அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு 12 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று ஈரோடு மண்டலத்திற்குட்பட்ட மூன்று மாவட்டங்களுக்கான புதிய நிர்வாகிகளை நியமித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, ஈரோடு மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தனபால், துணைத் தலைவராக கரூர் மாவட்டத்தை சேர்ந்த செந்தில்குமார், செயலாளராக கரூர் மாவட்டத்தை சேர்ந்த கவின்ராஜ், இணைச் செயலாளர்களாக ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த திருநாவுக்கரசு, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பொன் அரவிந்தன், துணைச் செயலாளர்களாக ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மொடக்குறிச்சி கௌதம், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த நல்லக்குமார், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மோகன்குமார், பொருளாளராக ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மகேஸ்ராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
English Summary
Erode Zone AIADMK IT wingUnit Adminis appointed