தேர்தல் முடிஞ்சதும் விலையை ஏத்திட்டங்களே., தமிழக அரசிடம் கேள்விகேட்ட பிரபல தமிழ் நடிகை.!
DMK GOVT VS KASTURI
தமிழக வாக்காளர்கள் தேர்தலின் போது குடித்த இலவச மதுபானத்திற்கு தற்போது பணம் கொடுக்கிறார்கள் என்று, பிரபல தமிழ் நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அவரின் அந்த டிவிட்டர் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது,
"மத்திய அரசுக்கு எதிராக விரல் நீட்ட தமிழக அரசுக்கு என்ன தார்மீக உரிமை உள்ளது? தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல் விலையை மத்திய பாஜக அரசு உயர்த்தும் என்று கதறி அழுதார்.
நம்ம நிலைக்கு இங்க திமுக அரசு உள்ளாட்சித் தேர்தல் முடியும் வரை மதுபானங்களின் விலையைக் கட்டுப்படுத்தியது.
பெட்ரோலும் மதுபானமும் ஒரே மாதிரியானவை அல்ல, ஆனால் உத்தியும் ஒன்றுதான். ஆவின் நிறுவனமும் விலையை உயர்த்தியுள்ளது.
தமிழக வாக்காளர்கள் தேர்தலின் போது குடித்த இலவச மதுபானத்திற்கு தற்போது பணம் கொடுக்கிறார்கள்" என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
கடைசியாக அந்த பதிவில் #PotVsKettle என்றும் பதிவிட்டுள்ளார்.