பரபரப்புக்கு மத்தியில் திமுகவில் இணைந்த பாஜக நிர்வாகிகள்.!
bjp excuetives joined dmk in thoothukudi
பாராளுமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த பிரச்சாரம் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தமிழகத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி மற்றும் பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை எதிர்கொள்கிறது. இந்த நிலையில், பாஜகவைச் சார்ந்த 85 பேர் அந்தக் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்து இருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி செயலாளர் பானுப்பிரியா மற்றும் விவசாய அணி மண்டல தலைவர் சரவணகுமார் உட்பட 85 பாஜக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர் .
English Summary
bjp excuetives joined dmk in thoothukudi