மணல் கொள்ளையில் ₹ 2,000 கோடி பெற்றார்.!! முதல்வர் பழி போடும் பாஜக!! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியும் அவருடைய ஆட்களும் சட்டவிரோதமாக மணல் அள்ளியதன் மூலம் ரூ.2,000 கோடியை குவித்துள்ளதாக ஆந்திர மாநில பாஜக தலைவர் டக்குபதி புரந்தேஸ்வரி குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் "மதுபான ஊழலைப் போன்ற ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசு மணல் அள்ளுதல் மற்றும் ஆறுகளில் தூர்வாருதலில் பல விதிகள் மற்றும் விதிமுறைகளை மீறியுள்ளது. முன்னதாக, மணல் அடைப்புகளை சுய உதவிக்குழு பெண்களால் நிர்வகிக்கப்பட்டது. பின்னர் இலவச மணல் கொள்கை கொண்டு வரப்பட்டது.  2019ல் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு மணல் கொள்கையை மாற்றியதோடு, முழு மாநிலத்திலும் மணல் அகழ்வு டெல்லியை தளமாகக் கொண்ட ஜெய்பிரகாஷ் பவர் வென்ச்சர்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

ஆந்திர மாநில அரசுக்கும் ஜெயபிரகாஷ் பவர் வென்ச்சர்ஸ் நிறுவனத்துக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி ஒப்பந்ததாரர் மாநில அரசுக்கு ஆண்டுக்கு ரூ.760 கோடி செலுத்த வேண்டும். ஆனால் ஜெயபிரகாஷ் வென்ச்சர்ஸ் லீஸ்க்கு கொடுக்கக் கூடாது என்ற நிபந்தனை மீறி விஜயவாடாவைச் சேர்ந்த நிறுவனத்திற்கு சுரங்கத்தை லீஸ்க்கு விட்டுள்ளது. 

மணல் மூலம் அந்த நிறுவனத்திற்கு கிடைக்கும் மாத வருமானம் ரூ.188 கோடி, அதில் ரூ.63 கோடி அரசுக்குச் சென்று மீதி ரூ.120 கோடி தாடேபள்ளி அரண்மனைக்கு (ஜெகன்) செல்கிறது. மாதத்திற்கு ரூ.120 கோடி வீதம் 16 மாதங்களில் அரண்மனைக்கு ரூ.2,000 கோடி சென்றுள்ளது.

இந்த பணப்பரிவர்த்தனை அனைத்தையும் ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸைச் சேர்ந்த சுதாகர் ரெட்டி என்பவர் நிர்வகித்து வருகிறார். அவருக்கு ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் உதவியதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. மணல் அள்ளுவதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் சுரங்கம் மற்றும் புவியியல் அதிகாரிகள் அனுமதி தேவைப்பட்டாலும், அது ஜெயபிரகாஷ் வென்ச்சர்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் எழுத்தரால் வழங்கப்பட்டது.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுகள் கூட புறக்கணிக்கப்படுகின்றன. இயற்கை வளங்களை சூறையாடுவதைத் தடுக்க ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசுக்கு எதிரான எங்கள் போராட்டத்தைத் தொடருவோம்" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bjo alleged jagan got 2000 crores illegal sand quarry


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->