'இதுக்கு பேரு மட்டும் வச்சா போதும்., புடிங்க ரூ.50 ஆயிரம்'!! அரசாங்கத்தின் அதிரடி ஆஃபர்!!
put a name to bullet train and get price
பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததும் புல்லட் ரயில் விட இந்தியாவில் ஏற்பாடு செய்யப்படும் என கூறி இருந்தார். அதன் படி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு 10 வழித்தடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றது.
2022-ம் ஆண்டில் ரயில்தடத்தில் ரயில்கள் விபப்படும் என தெரிகிறது. இதற்கு பெயர் வைக்கவும் சின்னம் வைக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றது.
இந்நிலையில், அதற்கு சின்னத்தையும், பெயரையும் வழங்கும் பொறுப்பு போது மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனை சிறந்த முறையில் தேர்வு செய்து கொடுப்பவர்களுக்கு பரிசுகளை அறிவித்துள்ளது மத்திய அரசு.
இந்த போட்டியில் கலந்து கொள்ள www.mygov.in என்ற இணையதளத்தை உபயோகப்படுத்தலாம். மார்ச் 25-ந்தேதி அனுப்ப கடைசி தேதியாகும். இதற்கு பரிசாக சிறப்பான சின்னத்துக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும். 5 பேருக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.
சிறந்த பெயரை சூடுபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கப்படும். ஆறுதல் பரிசாக 5 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
put a name to bullet train and get price