யாரும் ஓட்டு போடக்கூடாது.. துப்பாக்கியுடன் வந்த மாவோயிஸ்டுகள்.!! தேடுதல் வேட்டையில் போலீஸ் - Seithipunal
Seithipunal


கேரளாவில் நாளை மறுநாள் மக்களவை பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைய உள்ளதால் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அதேபோன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேசிய பொதுச் சயலாளர் டி.ராஜாவின் மனைவி போட்டியிடுகிறார். 

இதனால் வயநாடு தொகுதி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் வயநாடு கம்பமலை பகுதியில் உள்ள கிராமத்தில் இன்று காலை துப்பாக்கியுடன் புகுந்த  மாவோயிஸ்டுகள் சோமன், மனோஜ், சந்தோஷ், மொய்தீன் ஆகியோர் கிராம மக்களுக்கு அடிப்படை வசதி செய்து தராததால் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். 

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் கேரள மாநில போலீசார் மாவோயிஸ்ட் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala Mavoist threaten Tamils do not vote in loksabha election


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->