மூளைச்சாவு அடைந்த இரண்டு வயது குழந்தை.! பெற்றோர்களின் குணத்தால் நால்வரின் உடலில் உயிராக வாழும் சிறுவன்.!!  - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே பகுதியை சார்ந்த யுவான் பிரபு என்ற இரண்டு வயது சிறுவனின் மூளையில் கட்டி உருவான பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருந்து வந்தான். 

பிரபுவின் பெற்றோர்கள் சிகிச்சைக்காக மும்பை மெரின்லைன் பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் பிரபுவின் உடலை சோதனை செய்து., அறுவை சிகிச்சை மேற்கொண்டு இருந்தனர். 

அறுவை சிகிச்சை மேற்கொண்டும் எந்த விதமான முன்ணேற்றமும் உடல் நிலையில் ஏற்படாமல் இருந்த நிலையில்., பரிதாபமாக மூளைச்சாவு அடைந்து இருந்தான். இந்த தகவலை அறிந்த பெற்றோர்கள் இரண்டு வயது மகனின் நிலையை எண்ணி கதறியழுத்தனர். 

இதனையடுத்து தனது மகனின் உடல் உறுப்புக்கள் மூலமாக வாழட்டும் என்ற நோக்கத்துடன்., தாமாகவே முன்வந்து உடலுறுப்புகளை தானம் செய்ய விருப்பம் தெரிவித்தனர். இதனையடுத்து., சிறுவனின் உடலில் இருக்கும் இதயம்., சிறுநீரகம்., கல்லீரல் போன்ற உறுப்புகளை அறுவை சிகிச்சையின் மூலமாக அகற்றினர். 

சிறுவனின் இதயம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும்., கல்லீரல் தானேயில் இருக்கும் மருத்துவமனைக்கும்., சிறுநீரகம் மும்பையில் உள்ள மருத்துவமனைக்கும்., கண்கள் பரேலில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு., சிறு குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.

இதன் மூலமாக சுமார் 4 குழந்தைகள் மறுவாழ்வு பெற்றனர். சிறுவனின் இறப்பு பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் பெரும் துயரை ஏற்படுத்தினாலும்., சிறுவன் 4 குழந்தைகளின் உயிராக வாழ்ந்து வருகிறார்...   
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Mumbai a baby died by brain death his heart kidney donar by her parents


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->