ம.பியில் பரபரப்பு - எரிபொருள் நிரப்பச் சென்ற தனியார் பேருந்து - திடீரென தீப்பிடித்ததில் 2 பேர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


ம.பியில் பரபரப்பு - எரிபொரு நிரப்பச் சென்ற தனியார் பேருந்து - திடீரென தீப்பிடித்ததில் 2 பேர் படுகாயம்.!

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூரில் தனியார் பேருந்து ஒன்று பெட்ரோல் பம்பில் எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்தது. அப்போது திடீரென பேருந்தில் பெரிய நெருப்பு பந்து ஒன்று தாக்கி தீப்பிடித்துள்ளது. அப்போது பேருந்தின் ஓட்டுனர் மற்றும் உதவியாளர் இருவரும் எரிபொருள் நிரப்புவதற்காக கீழே இறங்கியுன்னர்.

இந்த தீயை பார்த்து பீதியடைந்த பயணிகள் பேருந்தில் இருந்து இறங்கி சாலையில் தலைதெறிக்க ஓடினர். தீப்பிடித்த சில நொடிகளிலேயே பெட்ரோல் பம்ப் ஊழியர்கள், தீயை அணைக்கும் கருவியைப் பயன்படுத்தி தீயை அனைத்து, பயணிகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர். 

இதையடுத்து பேருந்து அங்கிருந்து இயக்கப்பட்டது. இருப்பினும் இந்த தீ விபத்தில் படுகாயம் அடைந்த பேருந்தின் ஓட்டுனர் மற்றும் உதவியாளர் உள்ளிட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெட்ரோல் பம்பில் பெட்ரோல் நிரப்பும் போது பேருந்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த காட்சி அனைத்தும் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகி உள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fire accident to private bus in madhya pradesh petrol bunk


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->