அரசு ஊழியர்கள் 2வது திருமணம் செய்ய புதிய கட்டுப்பாடு!! - Seithipunal
Seithipunal


அசாம் மாநிலத்தில் ஹமாந்த் பிஸ்வாஸ் சர்மா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அரசு ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாட்டை மாநில அரசு விதித்துள்ளது. அசாம் மாநில அரசு ஊழியர்கள் இரண்டாவது திருமணம் செய்வதற்கு தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அசாம் மாநில முதல்வர் கூறுகையில் மத ரீதியில் அனுமதி இருந்தாலும், அதற்கு முன்னர் அரசு அனுமதி பெற வேண்டும். அரசு ஊழியர்கள் சிலர் இறந்த பிறகு, அவரின் மனைவிகள் ஓய்வூதியம் கேட்டு சண்டை போடும் நிகழ்வு அரங்கேறி வருவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பான சுற்றறிக்கையை அசாம் மாநில அரசு கடந்த அக்டோபர் 20ஆம் தேதி அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அனுப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Assam govt employees to marry 2nd time was restricted


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->